யாழி பக்கங்கள்
Home
என்னைப் பற்றி
Wednesday, 12 February 2014
ஆழ்கடலில் உறங்கும்
நீ
ஆட்டி வைக்கிறாய்....
கரை மோதி
கனத்த பாறையை உடைக்கிறது
சலனங்களின் பேரலை....
உன்னால் பரிகசிக்கப்பட்ட
பித்தேறிய பிரியங்களை
சுமந்து அலைகிறேன்
வெகுநேரமாய்
சுமைதாங்கி கற்களை
கடந்து பயணிக்கும்
நான்.
உன் வெட்கத்தின் நிறம் வாங்கிய
இந்த அந்தி
இருளுக்கு அழைக்கிறது....
என்னை
கிடாரின் நரம்புகளில்
உரசிப்போகிறது
பட்டாம்பூச்சி...
எழும்பிய இசை
மோனத்தில் ஆழ்த்தியது...
லயித்து கிடக்க
உன் வண்ணம் பூசிக்கொள்கிறது
என் மேனி.
Monday, 10 February 2014
இடைவெளி விட்டு விட்டு
உன் மௌனத்தின் காயங்கள்
இப்போது வாசி
இந்த புல்லாங்குழலை....
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)